அதிசயம்!
ஆனால் உண்மை. சென்னை வாழ் மக்கள் தங்கள் சந்ததியர்களாவது
அவர்களது காலத்தில், பேரம் பேசாமல் அல்லது தானி (Auto) ஓட்டுனர் கேட்கும்
கட்டணத்தைக் கொடுக்காமல்,அளவி (Meter) காட்டும் தொகையை
கொடுத்து
தானியில்பயணிப்பார்களா
என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, அந்த
அதிசயம் அவர்களது
காலத்திலேயே நடந்துவிட்டது!
ஆம். செப்டம்பர்
16, 2013 க்குப் பிறகு தானி ஒட்டுனர்கள் அவசியம் புதிய
கட்டணப்படித்தான் கட்டணம் வசூலிக்கவேண்டும்.என்றும் அவர்கள்
அரசு
வெளியிட்டுள்ள புதிய கட்டண அட்டையை வைத்திருக்காவிட்டால்,
அதாவது அந்த
அட்டை தானியில் பயணம் செய்பவர்களுக்குகத் தெரியும்
விதமாக
ஓட்டுனர் இருக்கைக்குப் பின்புறம் ஒட்டப்பட்டிருக்கவேண்டும் என்றும், இல்லையென்றால் அவர்களது
தானி பறிமுதல் செய்யப்படும் என அரசு
அறிவித்திருந்தது. மேலும் திருத்திய புதிய கட்டணம் கொண்டுள்ள
அளவிகளை அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் தானிகளில் பொறுத்தவேண்டும் என்றும்
அரசு அறிவித்திருந்தது.
சென்னையில்
உள்ள 72000 தானிகளில், செப்டம்பர் 15 ஆம் தேதி வரை
52000 தானி உரிமையார்கள் மட்டுமே
அரசு வெளியிட்டிருந்த புதிய கட்டண அட்டையை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பெற்றுக்
கொண்டதாகவும், மீதமுள்ள 20000
தானி உரிமையார்கள் மீது உரிய
நடவடிக்கை
எடுக்கப்படும் என்று அதற்காக போக்குவரத்து
அதிகாரிகள்
40 பேர் தனித் தனி
குழுக்களாக 16 ஆம் தேதி முதல் சென்னை முழுதும்
தீவிர
கண்காணிப்பில் ஈடுபடப் போவதாக நாளேடுகளில் செய்திகள் வந்தன.
அதே
நேரத்தில் வழக்கம்போல் தானி ஓட்டுனர்கள் அரசின் ஆணையை
நிறைவேற்ற
கால அவகாசம் தரவேண்டும் என்றும் அதுவரை நடவடிக்கை
எதுவும்
எடுக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டு இருப்பதாகாவும்
இன்னொரு
பக்கம் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன.
கடந்த கால அனுபவத்தால், நிச்சயம் நமது சென்னையில்
உள்ள தானி
ஓட்டுனர்கள்
இந்த புதிய கட்டணத்தை அமல்படுத்த விடமாட்டார்கள்.
அரசும் நான்
‘அடிப்பதுபோல்
அடிக்கிறேன். நீ அழுவதுபோல் அழு.’ என்று
சொல்வது போல்
வெறும் அறிக்கைகளோடு நின்றுவிடும் என
நினைத்திருந்தேன்.
ஆனால் எனது
நினைப்பு தவறாகிவிட்டது. சொன்னதோடு நிற்காமல் அரசு அலுவலர்கள் நேரடியாக களத்தில்
இறங்கியதால் 16 ஆம் தேதியே அரசின்
ஆணைப்படி இயங்காத 100 தானிகளுக்கு
மேல் பறிமுதல் செய்யப்பட்டன
என்றும்
என்று கேள்விப்பட்டபோது மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது.
அதே
நேரத்தில் சில தானி ஓட்டுனர்கள் புதிய கட்டணப்படி தான் கட்டணம்
தருவோம் என்ற
பயணிகளை வசை மாரி பொழிந்ததாகவும் நாளேடுகளில்
வந்த
செய்திகளை படித்தபோது, போக்குவரத்துஅலுவளர்களின் இந்த
‘தைரியமான’ நடவடிக்கை தொடரவேண்டும் என எல்லோரையும் போல
நானும்
விரும்பினேன்.
புதிய
கட்டணப்படி தானி ஓட்டுனர்கள் வசூலிக்கிறார்களா என சரிபார்க்க
எனக்கு
நேற்று ஒரு வாய்ப்பு கிடைத்தது. எனது வீடு இருக்கும் அண்ணாநகர்
மேற்கு முனை
குடியிருப்பிலிருந்து (DAV
பள்ளி அருகே)
கோடம்பாக்கத்திலிருக்கும்
Best Hospital போக நேற்று அந்த
பள்ளி அருகே,
தானிக்காக எனது துணைவியாருடன் காத்திருந்தேன். முதலில் வந்த தானியை
கை காட்டி
நிறுத்தியதும் தான் கவனித்தேன். அதில் அளவி பொருத்தப்பட்டிருக்கவில்லையென்று.
ஒட்டுனர்
என்னிடம் எங்கு போகவேண்டும் எனக் கேட்டதற்கு பதில்
சொல்லாமல் ‘அளவி இல்லையா?’ என்றேன் அதற்கு அவர் புதிய கட்டணத்தை திருத்த கொடுத்திருக்கிறேன். எங்கு போகவேண்டும்? சொல்லுங்கள்.’ என்றார்.
இடத்தை
சொன்னதும் ‘எவ்வளவு கொடுப்பீர்கள்?’ என்று ஆரம்பித்தார். நான்
‘ஏன் உங்களிடம்
புதிய கட்டண அட்டை இல்லையா?’ என்றேன். அதற்கு அவர் ‘இன்னும் வாங்கவில்லை.’ என்று சொன்னதும். ‘அதனாலென்ன என்னிடம் புதிய கட்டண
அட்டை உள்ளது.’ என்றேன்.
வீட்டைவிட்டு
கிளம்பும்போதே நாளேட்டில் வந்திருந்த கட்டண விவரம் கொண்ட பக்கத்தை எடுத்து பையில்
வைத்திருந்தேன். அவ்வளவுதான், எதுவும் பேசாமல் விருட்டென்று தானியை கிளப்பி சென்றுவிட்டார்.
சற்று நேரம்
கழித்து வந்த மற்றொரு தானியை நிறுத்தினேன். அதில் அளவி
இருந்தது. தானியின்
முகப்பிலும் புதிய கட்டண முறைப்படி அளவி திருத்தப்பட்டிருப்பதாக
எழுதப்பட்டிருந்தது. கோடம்பாக்கம் போகவேண்டும்
என்று சொல்லி ‘புதிய கட்டணம்
தானே.’ என்றேன். ‘ஆமாம்.’என்றார்.
சந்தோஷம் பொங்க ஏறி
உட்கார்ந்தோம்.
போகும்போது
அவர் நிறைய பேசிக்கொண்டிருந்தார். அரசைச் சாடினார். பின்பு
Share Auto க்களையும் சாடினார். பிறகு மெதுவாக ‘சார். பல ஆண்டுகள்
உபயோகத்தில்
இல்லாததால் இந்த தானி சரியாக வேலை செய்ய இன்னும்
சில மாதங்கள்
ஆகலாம்.பாருங்கள் நேற்று இப்படித்தான் அடையாறிலிருந்து
கிண்டி
வந்தேன். அளவி சரியாக வேலை செய்யவில்லை. பயணி தான்
பார்த்துப்
போட்டுக் கொடுத்தார்.’ என்றார்.
எனக்குப்
புரிந்துவிட்டது. இவர் எதற்கு அடி போடுகிறார் என்று. உடனே.
நான் ‘கவலை வேண்டாம். என்னுடைய
இடத்திலிருந்து அந்த மருத்துவ
மனை 10 கிலோ மீட்டர் தூரத்துக்குள்
தான் உள்ளது.என்னிடம் புதிய கட்டண
விவரம் கொண்ட நாளேடு உள்ளது. அதைப் பார்த்து
சரியான கட்டணத்தைத் தருகிறேன்.’என்றேன். அவ்வளவுதான் அதற்குப் பிறகு அவரிடமிருந்து எந்த
பேச்சும்
இல்லை.
சிறிது
தூரம் சென்றதும் வண்டி நின்றுவிட்டது(!) அந்த ஒட்டுனர், இரண்டு
மூன்று தடவை
தானியை கிளப்ப முயற்சித்துவிட்டு, பின்னர் என்னிடம்
‘சார்.ஏதோ
'ப்ராப்ளம்'. என்னவென்று தெரியவில்லை. வேறு வண்டியில்
செல்லுங்கள்.’ என்று
சொல்லிவிட்டார். ஒருவேளை இறங்கும் இடத்தில
அதிகம்
கேட்டால் தரமாட்டேன் என நினைத்தாரோ என்னவோ! அளவி
காட்டிய
தொகையைக் கொடுத்து விட்டு, அந்த இடத்தில் வேறு வாகனம்
வர வாய்பில்லையாதலால்
நடக்க ஆரம்பித்தோம்.
சிறிது
தூரம் சென்றதும் வந்த Share Auto வில் ஏறி மருத்துவமனை அருகே இறங்கிக்கொண்டோம். பின்
மருத்துவரைப் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது
வெளியே நின்றிருந்த தானியின் ஒட்டுனரிடம்,’அண்ணா நகர் போகவேண்டும் வருக்கிறீர்களா?’ என்றேன்.
‘சரி.’ என்றதும், ‘புதிய கட்டணம்
தானே?’ என்றேன். ஆமாம் சார். திருத்தப்பட்ட
அளவி உள்ளது.
வாருங்கள். போகலாம்.’ ‘சரி. இவர்
வழியில் என்ன சொல்லப்போகிராரோ என நினைத்துக் கொண்டே ஏறி அமர்ந்தோம். திரும்பும்
வழியில் அவர் எதுவும் பேசவில்லை. வீட்டிற்கு வந்ததும் அளவியைப் பார்த்தேன்.ரூ.113
தான் காட்டியது.
சில்லறை
இல்லாததால் சந்தோஷத்தோடு ரூ.120 ஐக் கொடுத்தேன். அவரும் மகிழ்ச்சியோடு
வாங்கிக்கொண்டார். இதே மருத்துவ மனைக்கு சென்ற மாதம் வந்தபோது ரூ 200 கேட்ட
ஓட்டுனருக்கு ரூ 180 ஐ கொடுத்திருக்கிறேன்.
அப்போது கேட்டேன்.
இந்த புதிய கட்டண முறை வந்ததும் நிறைய வாடிக்கையாளர்கள் வருகிறார்களா?’ என்று. அதற்கு அவர் ‘முன்பை விட
அதிகம் பேர்
வருகிறார்கள்.’ என்றார். எனக்கு கேட்க சந்தோஷமாக இருந்தது.
இன்றைக்குக்
கூட நாளேடுகள் தரும் தகவல்கள் படி, இதுவரை பறிமுதல்
செய்யப்பட தானிக்கள் 400
க்கும் மேலாம். சில ஓட்டுனர்கள் காவல் துறைக்கும் போக்குவரத்துத் துறை அலுவலர்களுக்கும்
பயந்து, தானிக்களை ஒட்டாமல்
நிறுத்தி
வைத்திருக்கிறார்களாம். மேலும் தானி நிறுத்துமிடங்களில் உள்ள
ஓட்டுனர்கள் இன்னும்
பழைய முறையைத்தான் கடைபிடிக்கிறார்களாம்.
எனவே
காவல்துறையினரும் போக்குவரத்துத் துறையினரும் எல்லா தானி நிறுத்துமிடங்களிலும்
ஆய்வு செய்வது நல்ல பலனைக் கொடுக்கும். இந்த
திட்டம்
வெற்ற பெற நாமும் அளவி திருத்தப்படாத, தானிகளில் பயணம்
செய்யாமல்
புறக்கணிப்போம்.
இந்த சமயத்தில் Times Of India நாளேட்டிற்கு நாம் நன்றி சொல்லத்தான்
வேண்டும்.
ஓராண்டிற்கு முன்னால் ‘மீட்டர் எங்கே?’ என்று அவர்கள்
ஆரம்பித்த வைத்த
அந்த பொது நல கேள்விதான் பொது மக்களிடையே
ஒரு
விழிப்புணர்வை உண்டாக்கி எல்லோரும் ஒருமித்து குரல் எழுப்பவும், தயங்கிக்கொண்டிருந்த
அரசு இயந்திரமும் விழித்துக்கொண்டு நடவடிக்கை
எடுக்கவும் காரணமாக
இருந்தது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
சும்மாவா
சொன்னார்கள் ‘எழுதுகோலின் முனை வாள் முனையை விட
வலியது’ என்று.